
புதுடெல்லி,
சிலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சான்டியாகோவில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி- கொலம்பியாவின் நிகோலஸ் பேரியன்டாஸ் ஜோடி , அர்ஜென்டினாவின் மேக்சிமோ கோன்சலேஸ்- ஆன்ட்ரிஸ் மோல்டெனி இணையுடன் மோதியது
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரித்விக் சவுத்ரி- நிகோலஸ் பேரியன்டாஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.