கோவை: நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து முன்பு தினசரி சராசரியாக 100 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர்) வரை குடிநீர் எடுக்கப்பட்டது. அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டது.