சிறுவன் மூச்சுக் குழாயில் சிக்கிய ஆணி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்: நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு டீன் பாராட்டு

3 hours ago 2

நெல்லை: 8 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பம்பர ஆணியை நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நவீன கருவி மூலம் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றினர். தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள வள்ளியூர் கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப்(8) என்ற சிறுவன் விளையாடிய போது பம்பர ஆணி ஒன்றை விழுங்கிவிட்டான். அது அவனது இடது மூச்சுக் குழாயில் சிக்கியத். இதனால் சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டான். பெற்றோர் உடனடியாக அவனை நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இங்கு காது, மூக்கு, தொண்டை துறை மருத்துவ நிபுணர்கள் நவீன சிகிச்சை மூலம் பம்பர ஆணியை அகற்றினர். மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் ஆலோசனை படி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் கண்காணிப்பில் காது, மூக்கு, தொண்டை துறை பிரிவு தலைவர் ரவிக்குமார் தலைமையில் டாக்டர்கள் ராஜ்கமல் பாண்டியன், பிரியதர்ஷினி, முத்தமிழ் சிலம்பு, மயக்கவியல் துறை தலைவர் சீனிவாசன், டாக்டர் தயூப் கான், அபிராமி ஆகியோர் இந்த சிகிச்சையை 30 நிமிடங்கள் மேற்கொண்டு வெற்றிகரமாக சாதனை படைத்தனர். மருத்துவ குழுவினரை டாக்டர் டீன் ரேவதி பாலன் பாராட்டினார்.

The post சிறுவன் மூச்சுக் குழாயில் சிக்கிய ஆணி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்: நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு டீன் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article