3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்படுவர்: சிஐஎஸ்எஃப் டைரக்டர் ஜென்ரல் தகவல்

3 hours ago 2

சென்னை: சிஐஎஸ்எஃப் பிரிவில் அடுத்த 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக, அதன் டைரக்டர் ஜென்ரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி தெரிவித்தார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள மண்டல பயிற்சி மையத்தில் நாளை (மார்ச் 7) நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். விழாவில் ஜம்மு-காஷ்மீரில் 32 அறைகள் அடங்கிய முகாம் அலுவலகம், கொல்கத்தாவில் ஆயுதங்கள் வைப்பிடம், நொய்டாவில் 240 வீரர்களுக்கான குடியிருப்பு, சிவகங்கையில் உள்ள அதிகாரிகள் தங்கும் விடுதி மற்றும் 128 வீரர்களுக்கான குடியிருப்பு, ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் ஆகிய பணிகளுக்கு காணொலி மூலம் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார்.

Read Entire Article