சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடக்கும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.
The post சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.