ஆசிய கூடைப்பந்து தொடரில் ஆட இந்திய அணி தகுதி

4 hours ago 2

புது டெல்லி: மங்கோலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கூடைப்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று மாலத்தீவில் நடந்தது. ஆண்கள் பிரிவில் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை அணிகள் இடம் பெற்றன. லீக் சுற்றில் வங்கதேசம் (117-29), மாலத்தீவு (151-20), இலங்கை (111-79) என பங்கேற்ற 4 அணிகளையும் இந்தியா வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இதை தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை மோதிய இறுதி போட்டியில் 94-62 என புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணி ஆசிய தொடருக்கு தகுதி பெற்றது.

இதை தொடர்ந்து நடந்த பெண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்திய அணி, இலங்கை (104-38), வங்கதேசம் (137-13), மாலத்தீவை (136-21) வீழ்த்தி, இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அடுத்து நடந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மீண்டும் மோதின. இதில் இந்திய அணி 103-52 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது.

The post ஆசிய கூடைப்பந்து தொடரில் ஆட இந்திய அணி தகுதி appeared first on Dinakaran.

Read Entire Article