சென்னை: பயணிகள் நலன் கருதி ஜூன் 21ல் சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜூன் 21 இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் சிறப்பு ரயில் (06089) புறப்படும்: மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (06090) நெல்லையில் இருந்து ஜூன் 22 இரவு 9.40க்கு புறப்படும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 18ஆம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
The post ஜூன் 21ல் சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.