சேலம், மே.6: சேலம் சன்னியாசிகுண்டு ரோட்டில் நேற்று முன்தினம் 15 வயது சிறுவன் செல்போனில் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். அந்நேரத்தில் டூவீலரில் வந்த 3 பேர், சிறுவனிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு மின்னல்வேகத்தில் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த கிச்சிப்பாளையம் போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இதில், செல்போனை பறித்து சென்றது, சன்னியாசிகுண்டு மீரான்சாயபு நகரை சேர்ந்த விஷால்(19), வாழப்பாடி சந்திரபிள்ளை வலசை சேர்ந்த தமிழரசு(21), பூலாவரிஅக்ரஹாரத்தை சேர்ந்த குரு(19) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சிறுவனிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.