சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது குடியாத்தம் அருகே ஆசைவார்த்தை கூறி

4 months ago 10

குடியாத்தம், ஜன.4: குடியாத்தம் அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கும் கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியை சேர்ந்த அருள் என்பவரின் மகன் கேவின்(20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பெங்களூருவில் வந்த கேவின் சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது நடந்ததை கூறி அழுதுள்ளார். அதனடிப்படையில், பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கேவினை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது குடியாத்தம் அருகே ஆசைவார்த்தை கூறி appeared first on Dinakaran.

Read Entire Article