மாணவனை வீட்டுக்கு அழைத்து கல்லூரி பேராசிரியை உல்லாசம்: கதவை பூட்டி போலீசில் சிக்க வைத்த கணவன்

3 hours ago 3

திருமலை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (40). இவர் அதே பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (33). பட்டதாரியான இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் கணினி ஆசிரியையாக உள்ளார். தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார். நாகலட்சுமிக்கும், அதே கல்லூரியில் படிக்கும் மணிகண்டன் (24) என்ற மாணவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. லட்சுமணன் தினமும் இரவில் தனது இறால் பண்ணைக்கு காவல் காக்க செல்லும்போது இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இறால் பண்ணைக்கு லட்சுமணன் வந்துவிட்டார். அப்போது மனைவி நாகலட்சுமி, போன் செய்து மணிகண்டனை வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் 7 வயது மகன் தூங்கிக்கொண்டிருந்த அதே அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். மனைவியை கையும் களவுமாக பிடிக்க அதிகாலை லட்சுமணன் வீட்டுக்கு வந்தார். அங்குள்ள ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது மனைவியும், மாணவனும் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்தார். உடனடியாக வீட்டின் வெளியே பூட்டுப்போட்டார். பின்னர் போலீசார் மற்றும் உறவினர்களுக்கு ேபான் செய்து தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். கதவை திறந்து இருவரையும் வெளியே அழைத்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது லட்சுமணன், மாணவன் மணிகண்டனை தாக்க முயன்றார். அதனை போலீசார் தடுத்தனர். பின்னர் மணிகண்டனை போலீசார் கைது செய்து அழைத்துசென்றனர்.

The post மாணவனை வீட்டுக்கு அழைத்து கல்லூரி பேராசிரியை உல்லாசம்: கதவை பூட்டி போலீசில் சிக்க வைத்த கணவன் appeared first on Dinakaran.

Read Entire Article