திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தெ.பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட (2) இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நியமனம் செய்யப்பட்டார். இவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆட்சியர் பணியில் உள்ளவர்கள், அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பார்கள்.
மத்திய மாநில அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதை தலையாய பணியாகக் கருதிச் செயல்படுவது வழக்கம். அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்களின் ஒத்துழைப்புடன், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று எளிதாகச் சேர்த்துவிடலாம். அதேநேரத்தில் புதிய திட்டங்களைத் தொடங்கிச் செயல்படுத்துவது என்பது சிம்ம சொப்பனமாக இருக்கும். நிலம் கையகப்படுத்துதல் முதல் திறப்பு விழா வரை ‘சவால்கள்’ நிறைந்திருக்கும். எண்ணற்ற சவால்கள் இருந்தாலும், பிரதான சவால்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.