சிப்காட் தொழில் பூங்கா விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

2 months ago 8

சென்னை: திருவள்ளூர் அருகே காவேரி ராஜபுரம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் பேட்டி அளித்தார். 2014 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் 27,668 வீடுகள் கட்டப்பட்டன; 6,017 பேருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டன. திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 4,505 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 39,915 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

The post சிப்காட் தொழில் பூங்கா விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Read Entire Article