சென்னை: சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “மாணவர் தலைவராக இருந்தது முதல் கேரள கல்விக் கொள்கையை வடிவமைத்தது வரை எம்.ஏ.பேபியின் பயணம் தொடர்கிறது. மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் நமது முயற்சி மேலும் வலுவடையும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு முதலமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.