சிங்காரச் சென்னை அட்டையில் 20 பரிவர்த்தனைக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்ற விதியால் மாநகர பேருந்து பயணிகள் புலம்பி வருகின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை அமலுக்கு வந்துவிட்டது. இதனால் சில்லறை பிரச்சினை என்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் முதல் என்சிஎம்சி எனப்படும் சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதால், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் ஆகியவற்றில் அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுவதில் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.