சென்னை: சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொடர்பாக பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி, நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையைச் சேர்ந்த, இரண்டு ஆண்கள், ஒரு பெண் என, மூவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவரும் நலமுடன் இருப்பதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
The post சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.