சாலை விபத்தில் 21 பேர் படுகாயம்

4 months ago 15

குன்றத்தூர்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த் (26). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் ஓட்டி வருகிறார். இவர், நேற்று காலை வளசரவாக்கத்தில் உள்ள பீர் கம்பெனிக்கு, ஊழியர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச்சாலை, திருமுடிவாக்கம் அருகே சென்றபோது, திடீரென முன்னாள் சென்ற லாரியின் மீது வேன் மோதியதில், வேனின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது.

இதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆனந்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், வேனில் பயணம் செய்த ஊழியர்கள் 18 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 21 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனைகண்ட, சக வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post சாலை விபத்தில் 21 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article