சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

3 hours ago 3

லாகூர்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன.

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த பிரிவிலிருந்து ஆஸ்திரலியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் கராச்சியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன . 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த அணியை எய்டன் மார்க்ரம் வழிநடத்துகிறார். 

Read Entire Article