சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் 300 பேர் கைது: முதல்வர் தலையிட சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கோரிக்கை

7 months ago 34

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நேற்று 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 1,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article