சாத்தை அருகே டீ கடைக்கு விசிட் அடித்த `நட்சத்திர ஆமை’: வனத்துறையிடம் ஒப்படைப்பு

4 hours ago 3

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே டீ கடை அருகே சிக்கிய நட்சத்திர ஆமையை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர். பின்னர் நட்சத்திர ஆமை, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு விலக்கில் கெபி உள்ளது. இங்குள்ள டீ கடை அருகே இன்று (வியாழன்) காலை ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதையடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஆமையை பார்வையிட்டனர். இதில் அந்த ஆமை, நட்சத்திர வகை ஆமை என்பது தெரியவந்தது. இந்த புதர் காடுகள் மற்றும் வறண்டப் பகுதிகளில் காணப்படுமாம்.

இந்த இனம் கவர்ச்சியான செல்லப்பிராணி வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானது. கடற்கரை பகுதியில் காணப்படும் இந்த வகை ஆமை, இங்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. சாத்தான்குளம்- திருச்செந்தூர் சாலையில் ஆமை, சிக்கியதால் வாகனங்களில் கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா? அல்லது வேறு யாரும் கொண்டு வந்தார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள், திருச்செந்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடம் சென்று நட்சத்திர ஆமையைமீட்டு கடல் பகுதியில் கொண்டுவிட நடவடிக்கை மேற்ெகாண்டனர்.

The post சாத்தை அருகே டீ கடைக்கு விசிட் அடித்த `நட்சத்திர ஆமை’: வனத்துறையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article