சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

2 months ago 10

மாமல்லபுரம், நவ.21: மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள இன்டர்கான்டினென்டல் தனியார் ரிசார்ட்டையொட்டி உள்ள கடற்கரையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி இன்று (21ம் தேதி) தொடங்கி 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 40 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 24 அணிகள் என மொத்தம் 48 அணிகள் கலந்துகொள்கின்றன. 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இன்று, மாலை 6 மணிக்கு தொடங்கும் சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

The post சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article