சாத்தூர், டிச.3: சாத்தூர் பகுதியில் எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால், அதிலிருந்து பறக்கும் தூசுகளால் பின்னால் வரும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் விபத்து அபாயம் நிலவுகிறது.
சாத்தூர் நகர் பகுதியில் விதி மீறல்களுடன் சென்று வரும் சரக்கு வாகனங்கள் அதிகரித்துள்ளன. எனவே போலீசார் கட்டுமான பொருட்களை திறந்த நிலையில் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
The post சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.