சமைத்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்ததால் உடல் கருகி பெண் பலி: மகன் கண்முன் பரிதாபம்

2 months ago 9

அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (56). இவரது மனைவி அழகு (44). இவர்களுக்கு 21 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, கார்த்திகேயன் வெளியே சென்றிருந்தார். வீட்டில், அழகு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த மகன், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.

அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் உடல் கருகி அழகு பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கண் எதிரே தாய் உடல் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சமைத்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்ததால் உடல் கருகி பெண் பலி: மகன் கண்முன் பரிதாபம் appeared first on Dinakaran.

Read Entire Article