எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

3 hours ago 2

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடி – தலைமன்னார் அருகே 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்நிலையில், இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருவது தமிழ்நாடு மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது appeared first on Dinakaran.

Read Entire Article