சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 227 கிலோ தங்கம்: முதலீடாக மாற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!!

2 months ago 10

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 227 கிலோ தங்கத்தை முதலீடாக மாற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்திலான பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதலீடாக மாற்றுவதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை ஏற்ற நீதிபதிகள்;

227 கிலோ தங்கத்தை முதலீடாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளனர். ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் கொண்டு வந்துள்ள தங்க முதலீடு திட்டத்தில் டெபாசிட் செய்யலாம் என்றும், இதிலிருந்து கிடைக்கும் வட்டியை தனி கணக்கில் சேமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஏற்கனவே கொச்சி, குருவாயூர் தேவசம் போர்டு இந்த திட்டத்தில் 869 கிலோ தங்கத்தை முதலீடு செய்து 2019 முதல் இதற்காக 13 கோடியே 56 லட்சம் ரூபாயை வட்டி வருவாயாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 227 கிலோ தங்கம்: முதலீடாக மாற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article