சத்தீஷ்கார்: 2 வாரங்களில் 7 மாவோயிஸ்டுகள் படுகொலை

6 hours ago 3

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜூன் மாத முதல் பாதியில், பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையில் 2 உயர்மட்ட தலைவர்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனால், தடை செய்யப்பட்ட அந்த மாவோயிஸ்டு அமைப்புக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில், 2025-ம் ஆண்டு ஜூன் முதல் பாதியில் பிஜாப்பூர் தேசிய பூங்கா பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டு குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.

அவர்களில் மத்திய குழு உறுப்பினரான கவுதம் என்ற சுதாகர், மற்றும் மாநில குழு உறுப்பினரான பாஸ்கர் ராவ் ஆகிய 2 மூத்த மாவோயிஸ்டு தலைவர்களும் அடங்குவார்கள்.

இவர்களில் மகேஷ் கொதியம் என்பவர் இர்பாகட்டா கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதற்காக கடந்த மார்ச் வரை இவருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

Read Entire Article