சண்டிகரில் எச்சரிக்கை ஒலி: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்

8 hours ago 2

சண்டிகர்,

பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து  , பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தன் டிரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டன.

அது மட்டும் இன்றி, ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஷெல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாநிலங்களில் நேற்று இரவு மின் தடை ஏற்படுத்தப்பட்டது. ஜம்முவில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர மாநிலங்களில் இன்று உச்ச கட்ட அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் பால்கனியில் நிற்க கூடாது எனவும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article