பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நக்சல்களுக்கு எதிரான தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை 8.30 மணியளவில் வீரர்கள் மீது பதுங்கி இருந்த நக்சல்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனையடுத்து வீரர்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று காலை தொடங்கி துப்பாக்கி சூடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இதுவரை 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
The post சட்டீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.