சட்டம் - ஒழுங்கு குறித்து தென்மண்டல காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை

3 hours ago 1

மதுரை: சட்டம், ஒழுங்கு மற்றும் பல்வேறு குற்றத்தடுப்பு குறித்து தென்மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.

தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இரண்டு நாள் பயணமாக இன்று (மார்ச் 6) காலை மதுரை வந்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. காவல் துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது, சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து அந்த குற்றங்களை தடுக்க வேண்டும்.

Read Entire Article