சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில்

2 days ago 5

சென்னை: சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்து வருகிறார். சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் தொடங்கியது. முதலில் கேள்வி நேரமும் பின்னர் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதமும் நடக்க உள்ளது.

சிவகங்கையில் அரசு சட்டக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கேள்வி எழுப்பினார். காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி வழங்கப்பட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே சிவகங்கையில் புதிதாக துவங்க வாய்ப்பில்லை என அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார்.

பண்ருட்டியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அமைக்கப்படுமா? என எம்.எல்.ஏ. வேல்முருகன் கேள்வி எழுப்பினார். கூடுதல் நீதிமன்றத்திற்கான பரிந்துரைகள் எதுவும் வரவில்லை. எதிர்காலத்தில் பரிந்துரைகள் பெறப்பட்டால், உயர் நீதிமன்றத்திடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், 12 தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 48,550 மாணவர்கள் சட்டம் படித்து வருகின்றனர். தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தற்காலிகமாக சட்டக்கல்லூரி தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில்அளித்துள்ளார்.

The post சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் appeared first on Dinakaran.

Read Entire Article