சட்ட விழிப்புணர்வு முகாம்

3 weeks ago 4

 

சிவகங்கை, ஜன. 10: சிவகங்கை அருகே கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி சுப்பையா தலைமை வகித்தார். கல்வி கற்றல், ஒழுக்கம், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்டவையின் முக்கியத்துவம், குழந்தைகள் பாதுகாப்பு வழிமுறைகள், குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசினர். இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் முனியாண்டி, வழக்கறிஞர் துரைப்பாண்டி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article