சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

1 week ago 5

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த குஜராத்திற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுலாக எடுத்துக்கொண்டது. இதனால் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதமும், இம்பேக்ட் வீரர் உள்பட அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டிக்கான ஊதியத்தில் 25 சதவீதம், இதில் எது குறைவோ அதனை அபராதமாக விதித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதற்கு முன் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச்சுக்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக அன்றைய ராஜஸ்தான் அணி கேப்டனாக இருந்த ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது 2வது முறையாக பந்துவீச்சுக்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டு விதிமுறையை மீறியதால், இரு மடங்காக கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article