சங்கரன்கோவில் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

4 months ago 18

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர். சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி 12 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு இன்று காலையில் நொச்சி கிராமத்திலிருந்து குழந்தைகளை ஏற்றி கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது நொச்சியில் இருந்து குறுகிய சாலையான வீரசிகாமணி செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து விபத்துக்குள்ளானதில் வண்டியிலிருந்து 4 குழந்தைகள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள வீரசிகாமணி தெருவில் உள்ள 2 குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சங்கரன்கோவில் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article