
கோவை,
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வா வாத்தியார், ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்த நிலையில், நடிகை கிர்த்தி ஷெட்டி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய கிர்த்தி ஷெட்டி, கோவையின் கலாசாரமும் பாரம்பரியமும், கோவையில் பேசப்படும் தமிழும் தனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் தன்னை நெகிழ வைத்ததாக குறிப்பிட்டார். மேலும் நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறேன், அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவை தருவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.