கோவை: கோவையில் மாட்டுக் கொட்டகையை காலி செய்யாததால் இளம்பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சூலூர் அருகே ரம்யா என்ற இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற ராஜேந்திரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ராஜேந்திரன், மாட்டுக் கொட்டகையை நாய்கள் வளர்ப்பதற்காக ரம்யாவுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். மாட்டுக் கொட்டகையை காலி செய்யாமல் தகராறு செய்ததால் ரம்யாவை ராஜேந்திரன் வெட்டிக் கொன்றார்.
The post கோவை அருகே இளம்பெண் அரிவாளால் வெட்டிக் கொலை!! appeared first on Dinakaran.