
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீரவாஞ்சிநகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பிரவீன்குமாா் (வயது 30). தொழிலாளியான இவா் நேற்று, கோவில்பட்டி-நாலாட்டின்புதூா் சாலை பகுதியில் காரிலிருந்தபடி லாட்டரிச் சீட்டு விற்றவா்களிடம் ரூ.100 கொடுத்து லாட்டரிச் சீட்டு வாங்கிவிட்டு, எப்போது குலுக்கல் எனக் கேட்டாராம். இதுதொடா்பான தகராறில் அந்தக் கும்பல் அரிவாளால் தாக்க முயன்றதில், பிரவீன்குமாரின் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து அந்தக் கும்பல் அரிவாள், கத்தியால் தாக்க முயன்றதால், அவா் பைக்கில் ஏறி ஒரு தனியார் ஆலை மேம்பாலம் அருகே இறங்கி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்றதுடன், வாலிபரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை மாவட்டம், ராமையா நகா் பாா்க் டவுனைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சுப்பையா(38), தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் அம்மன் கோயில் தெரு நிறைகுளத்தான் மகன் சுபாஷ்(27), தூத்துக்குடி அண்ணாநகா் சுகுமாா் மகன் செந்தில்(38), அண்ணாநகா் 10வது தெரு சண்முகசாமி மகன் நாராயணசாமி(38), சென்னை மேற்கு சைதாப்பேட்டை விஜிபி சாலையைச் சோ்ந்த லட்சுமிகாந்தன் மகன் கிஷோா்(27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.