
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மாடசாமி கோயில் அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரை அவதூறாக பேசிக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் போலீசார் அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் இலுப்பையூரணி மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் உத்தண்டை (வயது 24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.