கோயில்களில் சாமி தரிசனம்: கும்பகோணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த சிங்கப்பூர் அமைச்சர்

3 months ago 13

கும்பகோணம்: கும்பகோணத்திற்கு சிங்கப்பூரை சேர்ந்த உள்துறை அமைச்சர் சண்முகம் நேற்று காலை 7.30 மணிக்கு திருச்சியிலிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சுவாமிமலை முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம், அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில் ஆகியவற்றில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் சுவாமி தரிசனம்முடித்துவிட்டு காலை 11 மணியளவில் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு அமைச்சர் சண்முகம் வந்தடைந்தார். பின்னர் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் ஹெலிகாப்டர் மூலம் மயிலாடுதுறை சென்றார்.

The post கோயில்களில் சாமி தரிசனம்: கும்பகோணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த சிங்கப்பூர் அமைச்சர் appeared first on Dinakaran.

Read Entire Article