கோயம்பேடு சந்தையில் கணிசமாக குறைந்த காய்கறி விலை: முருங்கை கிலோ 200 குறைந்து ரூ.200க்கு விற்பனை!

4 months ago 18

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கிலோ ரூ.400க்கு விற்பனையான முருங்கை விலை தற்போது ரூ.200க்கு விற்பனையாகிறது. அதை தொடர்ந்து கிலோ ரூ.80க்கு விற்பனையான தக்காளி ரூ.50ஆக விலை குறைந்துள்ளது.

அதேபோல பூண்டின் விலையும் ரூ.50 குறைந்து ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தற்போது அனைத்து காய்கறிகளின் விலைகளும் சற்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோயம்பேடு சந்தையில் கணிசமாக குறைந்த காய்கறி விலை: முருங்கை கிலோ 200 குறைந்து ரூ.200க்கு விற்பனை! appeared first on Dinakaran.

Read Entire Article