கோத்தகிரி நகர பகுதியில் இரவு நேரத்தில் கரடி உலா

2 months ago 12

*பொது மக்கள் அச்சம்

கோத்தகிரி : கோத்தகிரி நகர பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கரடி உலா வரும் நிலையில், பொதுமக்கள் உடனே கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் காவல்நிலையம், பஜார், மாரியம்மன் கோவில், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக கரடி ஒன்று உலா வரத்தொடங்கி உள்ளது.
அவ்வாறு உலா வந்த கரடி நேற்று இரவு காவல்நிலையம் அருகே உலா வந்துள்ளது.

இதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் கரடியின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள நிலையில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் உலா வரும் ஒற்றை கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி நகர பகுதியில் இரவு நேரத்தில் கரடி உலா appeared first on Dinakaran.

Read Entire Article