கோடைகாலம் துவங்க உள்ளதால் கரூர் மாநகராட்சி பகுதிகளில் விற்பனைக்கு வந்த தர்பூசணி

14 hours ago 2

கரூர், பிப்.10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பனிக்காலம் முடிவடைந்து கோடைக்காலம் துவங்கவுள்ளதால் தர்ப்பூசணி பழ விற்பனை அதிகரித்துள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கோடைக்காலம் முழுதும் திண்டிவனம், புதுக்கோட்டை, விழுப்புரம் போன்ற பல்வேறு மாவட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் தர்ப்பூசணி பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது பனிக்காலம் விரைவில் முடிவடைந்து கோடைக்காலம் துவங்கவுள்ளது. இதனை கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தர்ப்பூசணி பழங்கள் மொத்தமாக கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த பழங்கள் உடலுக்கு நல்லது என்பதால் பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தற்போதைய நிலையில் இந்த பழங்கள் கிலோ ரூ., 25 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோடைகாலம் துவங்க உள்ளதால் கரூர் மாநகராட்சி பகுதிகளில் விற்பனைக்கு வந்த தர்பூசணி appeared first on Dinakaran.

Read Entire Article