கோடை காலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான பதிவுகள் நடைப்பெற்று வருகிறது: ஷில்பா பிரபாகர் தகவல்

4 hours ago 2

சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, பாண்டிசேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் போன்ற சுற்றுலாக்களுக்கு முன் பதிவுகள் நடைப்பெற்று வருகிறது என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். கலைஞரால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்காக 1971ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படிப்படியாக உயர்ந்து. தமிழ்நாடு முழுவதும் 26 ஓட்டல்கள் தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன.

மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில் 9 படகு குழாம்கள் மூலம் சுற்றுலா பய,ணிகளுக்கு படகு சவாரி மேற்கொள்ள ஏதுவாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேவையினை அறிந்து, அரைநாள் முதல் 14 நாட்கள் வரையில் 52 வகையான தொகுப்புச் சுற்றுலாக்களை இயக்கி வருகிறது. மேலும், கோடை விடுமுறை முன்னிட்டு பொது மக்கள் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பல்வேறு சுற்றுலாக்களை செயல்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை ஒரு நாள் சுற்றுலா, பாண்டிசேரி ஒரு நாள் சுற்றுலா மற்றும் மாமல்லபுரம் ஒரு நாள் சுற்றுலா மாமல்லபுரம், சுற்றுலாவில் உலக புகழ்ப்பெற்ற குடவரை கோயில்கள், குறிப்பாக முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பலதரப்பட்ட மிதவைப்படகுகள் இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல் தற்போது மேலும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகம் படுத்தும் விதமாக சொகுசு கப்பல் உணவகத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்க்காக கடந்த 07.01.2025 அன்றுஅமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ஆர்.இராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இந்த சொகுசு கப்பல் உணவகம் 3,000 சதுர பரப்பளவுடன் 2 அடுக்குகள் கொண்ட 100 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சொகுசு கப்பல் உணவகத்தில் கருத்தரங்குகள், அலுவலக கூட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கேளிக்கை விருந்துகள் மேஜிக் சோ போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கடந்த 5 மாதங்களாக சிறந்த வரவேற்ப்பினை பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு நாள் மாமல்லபுரம் சிறப்பு சுற்றுலாவிலும் இந்த சொகுசு கப்பல் தொகுப்பினை சேர்த்து சுற்றுலா இயக்க உள்ளது. இதனை தொடர்ந்து பொது மக்களின் வசதிக்காக சனிகிழமைகளிலில் 1 மணி நேரம் சவாரிகள் மற்றும் ஞாயிற்றுகிழமை 1 1/2 மணி நேரம் சவாரிகளிலும் விடுமுறை நாட்கள் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி படகு சவரி செய்யவும் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் www.ttdconline.com என்ற வலைதளத்தில் சொகுசு கப்பல் படகு சவாரியை முன்பதிவு செய்து பொது மக்கள் பயன்பெறலாம்.

மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்கள்: 18004251111, 044-25333333, 044-25333444 மற்றும் வாட்ஸ் அப் எண்.7550063121 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

The post கோடை காலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான பதிவுகள் நடைப்பெற்று வருகிறது: ஷில்பா பிரபாகர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article