கோடை கால விடுமுறை.. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 75 பயணிகளுக்கு சிறப்பு பரிசு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

1 month ago 11

சென்னை: கோடை கால விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 75 பயணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பயணச்சீட்டு முன்பதிவு செய்து, ஏப்.1 முதல் ஜூன் 15 வரை பயணம் மேற்கொள்வோரில் 75 பயணிகள் தேர்வு செய்யப்படுவர். 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு 25 பேர், இரண்டாம் பரிசு 25 பேர், 3ம் பரிசு 25 பேர் என மொத்தம் 75 பயணிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை கால விடுமுறை.. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 75 பயணிகளுக்கு சிறப்பு பரிசு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article