கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு, கோவை சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் நேற்று ஆஜரானார். அவரிடம் எஸ்.பி. மற்றும் கூடுதல் எஸ்.பி. தலைமையிலான போலீஸார் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரித்தனர்.