கொளந்தானூர் அம்மன் நகரில் சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும்

4 months ago 11

கரூர், ஜன. 3: கரூர் மாநகரா ட்சிக்குட்பட்ட கொளந்தானூர் அம்மன் நகர்ப்பகுதி யில் சாக்கடை வடிகால்அமை க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் கொளந்தானூர் பகுதியில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்லும்பாதை யில் அம்மன் நகர் பகுதி உள்ளது. இந்த நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதியில் உள்ள அம்மன் நகரில் இதுநாள் வரை சாக்கடை வடிகால் இல்லாததால் சாலையிலேயே கழிவுகள் கொட்டப்படும் அவல நிலை உள்ளது. இதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் உருவாகிறது. மேலும், இந்த பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்க வேண்டுமென இப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கொளந்தானூர் அம்மன் நகரில் சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article