கொட்டி தீர்த்த பலத்த மழை: குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு; மரங்கள் முறிந்து விழுந்தன

4 months ago 24

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. உதகையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. தற்போது விடுமுறை என்பதால் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இன்று (அக்.13) பிற்பகலில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கொட்டு மழையில் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்தனர். குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியார், சேலாஸ், கொலக்கம்பை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.

Read Entire Article