தேவையானவை:
தினை – 1 கப்
துவரம் பருப்பு – கால் கப்
பயத்தம் பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிது
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை:
தினை, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் தோசைகளாக சுட்டு எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டெடுக்கவும். சுவையான தினை பெசரட்டு தயார்.
The post தினை பெசரட்டு appeared first on Dinakaran.