திண்டுக்கல்: கொடைக்கானலில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு, அரசுக்கு பரிந்துரை செய்யும் என திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்ட சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது.