கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகளால் போக்குவரத்து நெரிசல் - நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்

1 month ago 9

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளது. வார விடுமுறை நாட்கள் மற்றும் வாரவிடுமுறையுடன் சேர்ந்து வரும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இந்நிலையில், மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு வாரவிடுமுறை, சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து அரசு விடுமுறை தினங்களால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.

Read Entire Article