சென்னை: கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தவெக வடசென்னை மாவட்டம் சார்பில் 33-வது விலையில்லா விருந்தகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திறந்து வைத்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, விஜய்யை ஆட்சியில் அமர வைப்போம் என்று உறுதியுடன் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 32 இடங்களில் விலையில்லா விருந்தகம் செயல்படுகிறது. இங்கு தினமும் காலையில் சுமார் 200 பேருக்கு இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது. சில இடங்களில் மதியமும் உணவு வழங்கப்படுகிறது.