கோவை:: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விபத்தில் இறந்த கனகராஜின் உறவினர் ரமேஷ் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார்.
இவ்வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக, 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இவ்வழக்கில் தடயங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த கனகராஜின் உறவினர் ரமேஷிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து இன்று (வியாழன்) கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: இறந்த கனகராஜின் உறவினர் சிபிசிஐடி ஆபீசில் ஆஜர் appeared first on Dinakaran.